பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மு. பரமசிவம் :

ஏழு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள விந்தன் சில படங்களுக்குப் பாடல்களையும் எழுதி யுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை: 'அன்பு படத்தில்.

ஒண்ணும் புரியவில்லை தம்பி, "கூண்டுக் கிளியில்,

கொஞ்சுங்கிளியான பெண்ணைக்

கூண்டுக்கிளி யாக்கி விட்டுக்

கெட்டி மேளம் கொட்டுவது,

சரியா, தப்பா!

'குலேபகாவலி"யில்

மயக்கும் மாலை பொழுதே நீ போ, போ! இனிக்கும் இன்ப இரவே நீ வா, வா!

இன்றும் சினிமா ரசிகர்கள் பாடிக்கொண்டி ருக்கும் புகழ் பெற்ற பாடல்கள் இவை.

கலை இலக்கியத் துறையில் விந்தன் புரிந்த சாதனைகளை, விந்தனின் திரை £_60é அனுபவங்களை, விந்தன் புகழைப் பரப்பி வருபவர் மு.பரமசிவம். சுவையான முறையில் தொகுத்துத் தந்துள்ளார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

வாழ்க விந்தன் புகழ்! வளர்க அவரின் இலக்கியத் தொண்டு!

女 大 ★