இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதல் :
———
நாண மெதற்கோ ?
ஆனந்தபைரவி ஆதி
எடுப்பு
நாண மெதற்கோ ? விழியே ! —மலை
நாட்டுத் தலைவன்தோள் பார்த்துக் களித்திருக்க
மேல் எடுப்பு
காண நிலந்தோய்கின்றாய் ! காணுக்கால் பார்க்கின்றாய் !
கள்ளக் தனமுனக்கே சொல்லித் தந்தவ ராரே !
அமைதி
மலையென்றுந் தோளென்றும் அறியாத மயக்கமோ ?
வளர்காதல் பெருக்கத்தால் ஏற்பட்ட குழப்பமோ ?
சிலைபாய்ச்ச நுனிதேயும் என்கிற தயக்கமோ?
கருடனைக் கண்ட சேல்கள் மறைகின்ற விளக்கமோ?
19