இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கூறாயோ?
உசேனி ரூபகம்
எடுப்பு
கிளியே ! கூறாயோ ? —பச்சைக்
கிளியே ! கூறாயோ ?
மேல் எடுப்பு
அளிசெய்த சேரன் அன்பன் பெயரைக்
கிளியே! கூறாயோ?
அமைதி
வளிதவழ் இமய மாமலை வரையில்
மறத்தமிழ் நாட்டின் திறத்தினை நட்டான் ;
ஒளித்தனர் வடவர் ; உயர்ந்தனர் தமிழர் ;
ஒண்டொடி என்மனம் கொண்டோடிப் போனாள்!
தோள்கண்ட மன்னர் வாள்கண்ட மன்னர்
தோரணம் கொடுத்தனர்; தூமணி நிறைத்தனர்
மூளும் பகைப்புலிக் குட்டுவன் என்றே
முட்டுவாய் செவிக்கின்பம்! ஊட்டுவேன் பால்பழம்!
20