இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாளைக் கடத்தலாமோ?
மோகனம்
ஆதி
எடுப்பு
நாளைக் கடத்தலாமோ? — மலை
நாட்டுத் தலைவனே ! நாளைக்கடத்தலாமோ ?
மேல் எடுப்பு
வாளையைப் போன்ற முன்கைத் தலைவியின் வளைகள் கழன்றன;கண்ணொளி அற்றது!
அமைதி
புன்னை உறவினை அன்னை உணர்ந்தனள்;
தென்னை குளக்கரை செல்லாதே என்றனள்;
கன்னற் கழனிக்கோ காவலும் மூண்டது;
மின்னல் இருள்என்றேன்: மெல்லியல் சோர்ந்தது!
கொள்ளிக்கண் புலிஏறு உருமிடும் சாரல்
கூச்சுக்கல் இருள்வழி பெரும்பாம்பின் சீறல்
உள்ளத்தை வாட்டுதே திருமணம் ஒன்றே
ஒண்டொடி உயிர்வாழ ஏற்ற மருந்தே!
22