இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சொல்வாயோ கல்யாணி ஜம்பை
எடுப்பு
எப்போது வருவாரென் றிப்போது சொல்வாயோ ? என்னின்பப் பசுங்கிளியே !
மேல் எடுப்பு
தப்பாய் நீ உரைத்தாலும் தமிழானுல் பொறுப்பேன்கன்! தத்தையே! எனதுள்ளம் தித்திக்க ஒருவார்த்தை
அமைதி
மழையின்றிப் பயிரில்லை! மணியின்றி விழியில்லை ! மனமின்றிச் செயலும் இல்லை! உழவின்றி வளமில்லை ! உப்பின்றிச் சுவையில்லை ! உயிரின்றி உடலில்லை! உறவின்றி வாழ்வில்லை!
27