இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிந்தித்துப் பார்த்தாயா ?
காப்பி ஆதி
எடுப்பு
செந்தமிழ் நாடு உன்றாய் நாடு
சிந்தித்துப் பார்த்தாயா?—தமிழா !
மேல் எடுப்பு
வந்தவர் ஆள வணங்கிக் கொடுத்தாய்;
வஞ்சகர் நற்பயன் துய்க்க விடுத்தாய்;
நொந்தனை; தமிழன் பெயரைக் கெடுத்தாய்;
நுழைபுல மற்றனை; பிறநூல் எடுத்தாய்.
அமைதி
மலையும் வயலும் புனலும் நிறைந்த
மறத்தமிழ் நாட்டினிலே மக்கள்
இலையே பசிஇங் கிலையே அந்தோ
எனுமொலி கேட்குதடா எங்கும்;
கொலைவாள் எடுஉன் மலைத்தோள் குலுக்கு
கொடுமைகள் சாய்ந்திடுமே நாட்டில்;
தலையாம் இப்பணி தாய்நாடுனதே
தயங்காதே தமிழா சற்றும்.
35