இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அருந் தமிழ் நாடிதுவோ ?
ஹிந்தோளம்
ஆதி
எடுப்பு
அருந்தமிழ் நாடிதுவோ ?—பசித்
துன்பம் அறியாமல் இன்பத்தில் வாழ்ந்திட்ட
மேல் எடுப்பு
விருந்து புறத்திருக்க மருந்தும் தனித்தே உண்ணுத்
திருந்திய மக்கள் பல்லோர் பெருந்திர ளாய்வாழ்ந்த
அமைதி
பாடிவந்தோர்க் குற்ற பரிசிலாய்த் தன்னரும்
நாடும் மலைவயல் காடும் வழங்கினோர்
ஒடேந்தித் திரிவதோ? உறுத்த லுனக்கிலையோ?
கூடிக் குறைமுடிக்கக் குதித்தெழு வாயடா !
கொடுமை எதிர்த்து நாட்டில் குறையை முடித்தவர்
கொல்புலி போல்பகை இல்லா தொழித்தவர்
மடமை இருட்குழியில் வாய்மூடிக் கிடப்பதோ ?
மறத்தமிழ் சிறுத்தையே ! புறப்படு ! புறப்படு
36