இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயக்கம்:
ஆடிக் காட்டு பாப்பா!
ராகமாலிகை
ஆதி
பாடி இழியும் அருவிக் கேற்ப
ஆடிக் காட்டு பாப்பா-சற்று
ஆடிக் காட்டு பாப்பா-
காடை நாண அங்கு மிங்கும்
ஓடிக் காட்டு பாப்பா-சற்று
ஓடிக் காட்டு பாப்பா.
நன்செய் புன்செய் உழுது மக்கள்
நலிவைத் தீர்த்த உழவன்-நாட்டு
நலிவைத் தீர்த்த உழவன்-
பஞ்சை யான நிலைமை மாற
வஞ்ச னையை ஓட்டு-பொருள் முடக்கும்
நெஞ்சிற் கறிவை யூட்டு.
மறவன் போல வாளை ஏந்தி
நடைநடந்து காட்டு-வெற்றி
நடை கடந்து காட்டு.
நெறியை மீறாத் தமிழர் வாழ்ந்த
நெறியைப் பாடிக் காட்டு-அற
நெறி யுணர்வை யூட்டே!
38