இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ் நாட்டுப் பெண்கள்
சிந்து பைரவி ஆதி
எடுப்பு
கார்கண்டு ஆடும் தோகை மயில் — என்றன்
கன்னித் தமிழ்நாட்டுப் பெண்கள் — இன்பக்
கன்னித் தமிழ்நாட்டுப் பெண்கள்.
மேல் எடுப்பு
ஆரியம் சூழ்ந்ததால் அறிவிழந்தார் —ஆண்கள்
அடிமைக்கு ஆட்பட்டுத் தாழ்ந்தார்.
அமைதி
வீரம் வளர்த்தவர் வெற்றி கொடுத்தவர்
வேல் விழியார் தமிழ்ப் பெண்கள் நெஞ்சில்
ஈரம் வளர்த்தவர் இன்பங் கொடுத்தவர்
ஏந்திழை யார்தமிழ்ப் பெண்கள் — நம்
தீந்தமிழ் நாட்டிற்கோ கண்கள்.
39