இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புறப்படு!
பெரெளி
ஆதி
எடுப்பு
பொழுது புலர்ந்தது! பொற்கதிர் தோன்றிற்று!
புலிநிகர் திராவிடத் தோழனே ! புறப்படு!
மேல் எடுப்பு
தொழுது வணங்கிய இருட்காலம் தொலைந்தது!
தோளைக் குலுக்கிப் பகை வீழ்ந்திடும் வாளேந்தி
அமைதி
ஆண்டு களித்த இனம் அடிமையில் வாழ்வதோ ?
அண்டிப் பிழைக்க வந்தோர் அரசாள விடுவதோ ?
ஈண்டுள்ள யாவையும் திராவிடத் தோழனே!
எல்லோர்க்கும் பொதுவாக்கி நல்வாழ்வு வாழ்வோம் நாம்!
47