ઝ છે தொல்காப்பியம்-பொருளதிகாரம்
"எல்வளை எம்மொடு நீவரின் யாழநின் மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை அல்லிசேர் ஆயிதழ் அரக்குத் தோய்ந்தவைபோலக் கல்லுறின் அவ்வடி கறுக்குந அல்லவோ’’ (கலித்.க.க )
என வரும்,
அன்னவை பிறவும் மடம்பட வந்த தோழி.கண்ணும் என்பது-மேற்சொல்லப்பட்டவையிற்றினும் மடமைபட வந்த தோழி மாட்டும் கூற்று நிகழும் என்றவாறு. அவையாவன:
'இல்லென இரந்தோர்க்கொன் lயாமை இழிவெனக் கல்லிறந்து செயல் சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ”
(கலித். உ)
என வரும்,
இந்நிகரன கூறியவழித் தலைவன் கூற்று நிகழும். இவ்
வழிக் கூறுங் கூற்றுக் காமமாகத் தோன்றாது பொருளாகத் தோன் றும்; காமத்திற்கு மாறாகக் கூறல் வேண்டுதலின்,
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பந் துடைத்துன்றுந் துண் (குறள். சுகடு)
என வரும்,
வேற்றுநாட் டகல்வயின் விழுமத்தானும் என்பது- வேற்று நாட்டு அகலும்வழி வரும் நோயின் கண்ணும் என்றவாறு.
அஃதாவது, பிரிவு ஒருப்பட்ட பின்பு போவேமோ தவிர் வேமோ எனச் சொல்லும் மனநிகழ்ச்சி.
- உ எண்ணாமையின்...... பொருட்கே’’ (அகம்.க.அ.ாடர்
என வரும்.
மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் என்பது-பிரிந்த தலைவன் மீட்டு வரவு வாய்ந்த வகையின் கணனும் என்றவாறு.