பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. உலகம் சுற்றிய விஞ்ஞானி
ஜி.டி. நாயுடு!

கோயம்புத்தூர் நகரை இன்றும் நாம் இங்கிலாந்து நாட்டின் இலங்காஷையர் என்றே அழைக்கின்றோம். இங்கிலாந்தில் உள்ள இலங்காஷையர் நகர், தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கும் ஒரு தொழில் நகரம்.

அதற்கேற்ப அங்கே பஞ்சு நூற்பு ஆலைகள், பருத்தி வியாபாரம், துணி உற்பத்தி ஆலைகள் மற்றும் இந்தத் தொழிலுக்கு ஏற்ற, சம்பந்தப்பட்ட தொழிற்கூடங்கள் அதிகமாக இயங்கி வருகின்றன.

கோவை - தமிழ் நாட்டின் :
இலங்காஷையர் நகரம்!

கோவை மாவட்டத்தில் அன்றும் சரி - இன்றும் சரி, எண்ணற்ற வகையான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பஞ்சு ஆலைகள், நூற்பு ஆலைகள், துணி நெய்யும் ஆலைகள், மோட்டார் உற்பத்தித் தொழிற் சாலைகள் மற்றும் தற்கால இயந்திரங்களுக்கு ஏற்ற தொழிற் கூடங்கள் ஏராளமாக இயங்குகின்றன.

அதனால், அந்த நகருக்குத் தமிழ்நாட்டின் லங்காஷையர் என்ற பெயர் வெள்ளையர்கள் ஆட்சியிலேயே ஏற்பட்டிருந்தது. அதனால், கோவை மாவட்டமும், கோயம்புத்தூர் நகரமும் பெரிய வணிக நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாக, நகரமாக வளர்ச்சி பெற்றன.