இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5
நடந்து கொண்டே இரு
அச்சத்தின் வெறுப்புணர்வின்
அடிவயிற்றில் கருவுற்றே
இச்சகத்தின் மாந்தர்களில்
இலட்சோப இலட்சம்பேர்
மாண்டொழிந்தே போவதற்கும்
மாறாப்பிணி தீமையெலாம்
பூண்டலைந்தே நலிவற்கும்
போரன்றோ காரணமாம்.
போர்துறந்த அமைதிதவழ்
புவிகாண நேருபிரான்
சீர்சிறக்கச் செய்தபணி
செப்பிடவும் ஏதுங்கொல்?
மூண்டுவரும் குரோத்தை
முறைகேடாம் ஆவேசத்தைத்
தீண்டவரும் ஆசைகளை
தீரமுடன் விட்டொழித்தே
நெட்டநெடும் பாட்டையிலே
நிமிர்ந்துநடை போட்டிடுவோம்.
பாரதத்தின் 'நேருசுடர்'
பார்முழுதும் ஒளிதீட்டும்