உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நாடோடி இலக்கியம்

மார்க்கண்டனைக் கொல்ல வாருன்எம ராஜன் காலதூதர் வந்து கட்டளைப் படியே ..........கடுங்கோப மாளுர் - ஈசுவரரும் பார்த்து எமனை உதைத்தார்.

புராணங்கள் புத்தக ரூபத்திலே வருவதற்கு முன்னேயே, ஊர் ஊராக் வழங்கும் நாடோடி இலக்கி யத்தில் தெய்வங்களின் மான்மியங்கள் புகுந்து கொண்டன. கேட்பதற்குப் பொறுமையும், தெரிந்து கொள்வதற்குப் பழக்கமும், அநுபுவிப்பதற்கு உள்ளமும் இருக்குமால்ை உதயத்துக்கு முன்பிருந்து அஸ்தமனம் வரையில் கேட்கலாம். பல புராணங்களின் கதம்ப மாகவும் பல செய்திகளின் கோவையாகவும் பல உணர்ச்சிகளின் மாலையாகவும் ஏற்றப்பாட்டு அமைந் திருப்பதை அப்போது உணரலாம்.