இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நான் மணிக்கடிகை 7
எள்ளற்க என்றும் எளியரென் றென்பெறினும் கொள்ளற்க கொள்ளார் கைம்மேலவா- உள்சுடினும் சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க கூறல் லவற்றை விரைந்து. (1)
பறைபட வாழா. வசுணமா, உள்ளம் குறைபட வாழார் உரவோர் - நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம், தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாஞ் சால்பு. . (2)
மண்ணியறிய மணிநலம், பண்ணமைத்
தேறிய பின்னறிப மாநலம் - மாசறச்
சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப கேளிரான், ஆய பயன். (3)
கள்ளி வயிற்றி னகில்பிறக்கும் மான்வயிற்றின் ஒள்ளரி தாரம் பிறக்கும் - பெருங்கடலுள் பல்விலைய முத்தம் பிறக்கும், அறிவார்யார் நல்லாள் பிறக்குங் குடி. (4)
கல்லிற் பிறக்குங் கதிர்மணி, காதலி சொல்லிற் பிறக்கும் முயர்மதம் - மெல்லென்
றருளிற் பிறக்கு மறநெறி, எல்லாம்
பொருளிற் பிறந்து விடும். (5)