இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5
மறுநாள் பழக்கம்போல் யாவரும் பாட
சாலைக்குச் சென்றார்கள். நாராயணன் என்றும் போலவே எல்லாச் சிறுவர்களிடமும் அன்பாக இருந்து வந்தான். இன்னும் சொல்ல வேண்டுமானால் அவன் அந்த நிகழ்ச்சியை மறந்து விட்டான் என்றுகூடச் சொல்லலாம். மாணிக்கத்துக்கோ நாராயணன் மீது வஞ்சம் குடிகொண்டு இருந்தது. ஆனால், அவன் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளவே இல்லை. அவனுக்கு மற்ற நண்பர்களாகிய கோவிந்தன், கந்தன் முதலியவர்கள் மீதும் சிறிது கோபம் இருந்தது. அதையும் அவன் காட்டிக் கொள்ளவில்லை. ஆசிரியரோ மாணிக்கத்தின் மீதும் மற்றச் சிறுவர்களின் மீதும் கண்ணாகவே இருந்தார். அன்று மாணிக்கம் சொல்லியது உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும்
23