உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாராயணன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாராயணனுக்கு மறுபடியும் மனத்தில் திகில் உண்டாயிற்று. ஆதலால், அவன் பயந்துகொண்டே தன் சட்டைப் பையை நன்றாகத் தடவினான். பிறகு, அவன் தன் துணியையும் உதறிப் பார்த்தான். கடிகாரம் அகப்படவே யில்லை.
ஆதலால், அவர் அவனை அவ்வளவோடு நிறுத்திவிட்டு, அவனுக்கு அடுத்திருந்த சிறுவனைப் பல கேள்விகள் கேட்டுப் பார்த்தார். அவன் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிட்டான். அச் சிறுவனும் நல்லவன். ஆதலால், அவர் அவனுக்கு அடுத்திருந்த பிள்ளைகளை வரிசையாகக் கேட்டுக் கொண்டே மாணிக்கத்தின் அருகே வந்தார். மாணிக்கம் அவர் அங்கே வருவதற்கு முன்பே மிக்க தைரியசாலிபோல் தயாராக எழுந்து நின்றான். ஆனால், மனத்தில் அச்சம் மிகுதியும் இருந்தது. ஆசிரியர் அவனைப் பல கேள்விகள் கேட்டார். எல்லாக் கேள்விகளுக்கும் அவன் தனக்கு ஒன்றும் தெரியாது என்று மிக உரத்துக் கூறினான். அவன் செய்த

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/46&oldid=1340240" இலிருந்து மீள்விக்கப்பட்டது