இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
போதுகூட கலைஞன் இலக்கிய மயக்கத்தை உருவாக்கி விடுகிறன். இழவு வீடுகளில் இசையும் கூத்தும் நடத்தும் ஏழைக் கொட்டிக்காரன் கூட இரவெல்லாம் தூங்குவது GuTತು மயங்கும் இதயத்தைத் தாலாட்டுகிருன். கடுமை யான பிரச்சனைக் கதையொன்றை சொல்ல வந்த ராசீ ஜயதேவரின் கீத கோவிந்தத்திற்கு இணையான கற்பனை ஒன்றைத் தருகிறர்-இரவிலே ராதை கண்ணனைத் தேடிச் செல்கிருள். தோழிப் பெண் அவளைத் தடுக்கிருள். இது இரவு நேரம் தானே என்று ராதா கெஞ்சுகிருள். 'இது இரவு தான்! ஆனால் நீ மின்னல் அல்லவா ராதா?’ என்கிருள் தோழி.--ராசீ அவர்கள் அழுக்குப் படிந்த வக்கரித்துப்போன நாடோடித் தன்மையுள்ள படிக்காத பாமரன் ஒருவனிடம் இதைவிட உயர்ந்த சிந்தனையை உருவாக்கிக் காட்டுகிருர். அடி வாங்கிக் 28