இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 7
- அக்கருத்து உறழ் கருத்து.
- அறை கூவலை ஏற்போருடன் சான்றோர் அவை யிலோ ஆய்வு அரங்கிலோ மன்னன் முன்னரோ கருத்துப்போர் செய்வர்.
- வென்றவர் கருத்து மற்றவரால் ஏற்கப்படும்.
இது சங்கப் பாங்கு
இது பட்டி மண்டப வரலாற்றுப் பாதையில் முதற்கல்,
அடுத்த கல்
பட்டி மண்டப வரலாற்றின் அடுத்தடுத்த கற்களாக இரண்டு கருத்துக்களை ஆய்ந்து காணலாம்.
ஒன்று :
‘நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப ,3
- என்பது தொல்காப்பிய நூற்பா. இதற்குப் பேராசிரியர் எழுதிய உரையின் கருத்தாவது :
‘நிறைந்த பொருளுள்ள சொற்களைச் சொல்லும் சான்றோர், முந்தையச் சான்றோர் மேல் ஆணை