இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40
“அம்மா தாங்கள் யார்?” என்று ஆண் குருவி கேட்டது.
“குழந்தைகளே, நான்தான் கடல்தேவதை. உங்களுக்கு என்ன வேண்டும், கேளுங்கள் நான் தருகிறேன்” என்றாள் அந்தப் பெண்மணி.
சிட்டுக் குருவிகள் அவளை நிமிர்ந்து பார்த்தன.
“தாயே! எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம். தங்களிடம் என்ன கேட்பதென்றே தெரியவில்லை” என்று கூறின.
“நல்ல குழந்தைகள் இருந்தாலும் நான் உங்களுக்கு ஒரு நல்ல மொழி சொல்லுகிறேன். அதைக் கேட்டு நடங்கள். உங்கள் வாழ்வு என்றும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் மிக்க மகிழ்ச்சியைக் காண்பீர்கள்” என்று கூறினாள் கடல் தேவதை.
‘சொல்லுங்கள் அம்மா!’ என்று இரண்டு சிட்டுக் குருவிகளும் பணிவோடு கேட்டன.