பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

புதியதோர் உலகு செய்வோம்

இந்நாட்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், மோசடிகள் இல்லாத செய்திகளே இல்லை.

அண்மைக்காலங்களில், மொத்த இந்திய சமுதாயமும் பல்வேறு வகைகளில் வாழ்வுப் பிரச்னைகளில் சிக்கி நலிந்துபோயிருக்கிறது. விலைவாசி ஏற்றம், நுகர்வுக் கலாசாரத்தின் கிடுக்கிப்பிடிகள், கல்வியும், இளமைத் திறனும் ஆக்கபூர்வமான மனிதவள ஆற்றல் மேம்பாடுகளுக்குப் பயன்படாமல் அழியும் வேலையில்லா, வாழ்க்கையில்லாத சூழல், விரக்திமனப்பான்மையில் நம்பிக்கைத் துளிர்கள் கருகும் சோகங்கள், எல்லாமே கீழ், இடைநிலை மக்களைப் பெரிதும் பாதித்திருக்கின்றன. சட்டங்களும், அறநெறிகளும், செல்லாக் காசுகளாகிவிட்ட இந்த நிலையில், பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவள் பெண்ணே.

மேலை நாடுகளில் பெண்கள் வாக்குரிமைக்காக, நூற்றாண்டுகள் போராட வேண்டி இருந்தது. பெண் தன் உடலின் மீதுள்ள சுயஉரிமையைக்கூட இழந்த நிலையில், அறியாமை இருட்டிலிருந்து மீளும் கல்வி உரிமையைப் பெறவே வாக்குரிமை முதல் கட்டத் தேவையாக இருந்தது. ஆனால் இந்த நாட்டில், பெண்களுக்கு வாக்குரிமை எந்தப் போராட்டமும் இல்லாமல் கிடைத்துவிட்டது. கல்வி உரிமை, தொழில் செய்து பொருள் ஈட்டும் உரிமை என்று, தற்சார்புக்கான அனைத்து உரிமைகளும் அவருக்கு இருக்கின்றன. புதிய புதிய துறைகளில், ஆணே கோலோச்சிய நிர்வாகத் துறைகளில், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளில், அவள் தன் ஆற்றலை நிரூபித்தும் இருக்கிறாள்.

எனினும் இந்த 'வசீகரங்கள்' மகளிர் தினங்களில் புள்ளி விவரங்கள் கூறுவதற்கும், பெருமையுடன் பேசிக்