உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O பூர்ணசந்திரோதயம்-3 வந்துவிடப் போகிறீர்களே என்று நினைத்து நான் தனியாகவாவது வந்து உங்களைப் பார்த்து பேசிவிட்டுப் போகலாம் என்று நினைத்து வந்தேன்' என்று கூறி இடைகுலுக்கி முகம் மினுக்கி நகைநகைத்துப்பேசினாள். உடனே கலியாணசுந்தரம், 'அப்படியானால் சரிதான். இப்படிப்பட்ட பூஞ்சோலைக்குள் நாம் இருவரும் தனியாக ரகசியம் பேசிக்கொண்டிருப்பதை யாராவது காண்பாரானால், நம்மைப் பற்றித் தவறான அபிப்பிராயம் கொள்ள நேரும். ஆகையால், நாம் இவ்விடத்தில் அதிக நேரம் நிற்கக் கூடாது. விஷயத்தை சுருக்கமாகப் பேசி முடித்துக்கொண்டு நாம் சீக்கிரமாகப் போய்விட வேண்டும். எல்லாவற்றிற்கும் நாம் இன்னம் கொஞ்சம் மறைவான இடத்துக்குப்போவோம்" என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் அப்பால் போனான். ஞாயிற்றுக்கிழமையாகிய அன்றையதினம் அந்த ஊரில் பெருத்த சந்தை நடைபெறுவது வழக்கம். ஆதலால், வெளியூர்களிலிருந்து வரும் ஜனங்கள் அந்தச் சோலையில் வந்து தங்கிக் காலையில் கட்டுசாதம் உண்டு, பிற்பகலில் களைப்பாறியும் போவது வழக்கம். ஆதலால், ஆங்காங்கு ஜனங்கள் காணப்பட்டனர். ஆதலால், கலியாண சுந்தரம் அந்த அழகிய மடந்தையை மறைவான ஒரிடத்திற்கு அழைத்துப்போய் வைத்துக்கொண்டு சம்பாவிக்கத் தொடங்கி, 'தனம்! நேற்று ராத்திரி நீ அனுப்பியிருந்த கடிதத்தை நான் நிரம் பவும் கவனமாகப் படித்து மிகவும் சந்தோஷம் அடைந்தேன். இந்த உத்தியோகம் வேண்டாமென்று நீ விலகிக் கொள்ளத் தீர்மானித்து விட்டதாகவும், உன் அக்காளும் அப்படியே செய்ய இணங்கிவிட்டதாகவும் நீ எழுதியிருந்ததைப் பற்றி நான் உங்களிருவரையும் நிரம்பவும் மெச்சுகிறேன். உன் சின்னம்மாள் அப்படிச் செய்யக் கூடாதென்று பிடிவாதம் செய்கிறாள். உன் தங்கை அவளுடைய புத்திமதிப்படி தான்