உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொங்கற்பரிசு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கஞ்சிக்கு வழியுண்டோ?

உழவன் :
             ழையும் குறைந்தது வானம் வெளுத்தது!
             வந்தது புத்தாண்டு பெண்ணே! -தைத்திங்கள்
             வந்தது வந்தது. கண்ணே !


உழத்தி : -
     வானம்வெளுத்தென்ன?.மழையும்குறைந்தென்ன
     வறுமை குறைந்ததோ மச்சான் ? -பசி
     வாட்டம் குறைந்ததோ மச்சான் ?


உழவன் :
           கன்னல் முதிர்ந்தது! தென்னே பழுத்தது !
           கதிரொளி வந்தது பெண்ணே -புதுக்
           கதிரொளி வந்தது பெண்னே !


உழத்தி :
       கன்னல் முதிர்ந்தென்ன தென்னைபழுத்தென்ன
       கட்டத் துணியுண்டோ மச்சான் ?- நொய்க்
       கஞ்சிக்கு வழியுண்டோ மச்சான் ?


உழவன் : -
          குட்டையும் பூத்தது கொடிசெடி பூத்தன!
          குரலெங்கும் கேட்குது பெண்ணே ! -
          பொங்கற் குரலெங்கும் கேட்குது பெண்ணே !

17
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/25&oldid=1148480" இலிருந்து மீள்விக்கப்பட்டது