இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உழத்தி : -
குட்டையும் பூத்தென்ன? குரலெங்கும் கேட்டென்ன?
குந்தக் குடிசையுண்டோ மச்சான் : -நாம் குடிசெய
இடமுண்டோ மச்சான்?
உழவன் :
நன்செய் விளைந்தது! புன்செய் விளைந்தது!
நாம்தமிழ்ப் பொங்கலைக் கண்டோம்! - பெண்ணே !
நாம்தமிழ்ப் பொங்கலே உண்டோம்!
உழத்தி:
நன்செய் விளைந்தென்ன? புன்செய் விளைந்தென்ன?
நாமென்றும் உழைப்பவர் தாமே ? -விளைவை
நம்மாண்டை அறுப்பவர் தாமே !
உழவன் :
ஆண்டவன் படைப்படி ! அதற்கென்ன செய்வது
அழுதாலும் தீராதே கண்ணே -நித்தம்
அழுதாலும் தீராதே கண்ணே !
உழத்தி: -
ஆண்டவன் படைப்பல்ல! 'கீண்டவன் படைப்பல்ல
ஆகாதார் படைப்பது மச்சான்! - முனைந்தால் !
போகா திருக்குமோ மச்சான் !