இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விட்டுப் பிரிய மனமில்லாமல் வருந்தினேன். ஆதலால், நான் அதனை மடியில் வைத்துச் செருகினேன்; பிறகு காகில் செருக முயன்றேன் ; தாடைக்குள் வைத்து அடக்கியும் பார்த்தேன். ஏதுவும் தகுந்த இடமாக எனக்குத் தோன்றவில்லை. முடிவில் நான் அதனை என்துணியிலே வைத்து அழுத்தமாய் முடியிட்டேன். ஆனால் அதன் அழகைப் பார்த்துக் கொண்டே இருப்பதற்கில்லையே என்ற வருத்த மட்டும் மிகுதியும் இருந்தது. ஆதலால், நான் விட்டுக்குள் நுழையும் வரையில் அந்த முடிப்பைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டே சென்றேன்.
நான் இவ்விதம் என் எசமானர் வீட்டை அடைந்து மாடுகளைத் தொழு
15