இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
லோரும், 'குப்பா, என்ன? உனக்கு உடம்பு சுகம் இல்லையா!' என்று கேட்க ஆரம்பித்தார்கள்.
நான் ‘ஆம்' என்று சொல்லித் தலை குனிந்து என் வேலையைச் செய்தேன்.
அன்று எனக்கு உடம்பு மிகவும் இளைத்திருந்தது. ஒன்றிலும் விருப்பம் செல்லவில்லை. என் மார்பு 'படபட' வென்று அடித்துக் கொண்டு இருந்தது. நான் ஏதோ பெரிய குற்றம் செய்து விட்டதாகவே எண்ணினேன். ஆனால், அது என்ன குற்றம் என்று எனக்குச் சிறிதும் தெரியவில்லை. என்றாலும், இவ்வளவு துன்பத்திற்கும் அந்தப் பொன் நாணயமே காரணம் என்பதை நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன். ஆனால் அதை என்ன செய்வது என்று யோசித்தேன். யாருக்
34