இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என் எசமானர் அவ்விதம் சொன்னவுடனே என் கைகளும் கால்களும் நடுங்கின. நான் 'ஓ' வென்று கூச்சலிட்டுத் தரையில் விழுந்தேன்; பிறகு எழுந்து என் எசமானர் அருகே சென்று அவர் காலில் விழுந்தேன்; 'ஐயா, என்னைக் காப்பற்ற வேண்டும்--காப்பற்ற வேண்டும்,' என்று கதறினேன்.
அப்போது என் எசமானர், 'என்ன சங்கதி? உனக்கு என்ன ஆபத்து நேர்ந்தது? சீக்கிரம் சொல்?" என்றார். அதற்கு நான், 'ஐயா, என்னை மன்னிக்க வேண்டும்--மன்னிக்க வேண்டும்' என்று கூவி அழ ஆரம்பித்தேன்.
அப்போது அவர்,'என்னடா இழவாய் இருக்கிறது! நடந்த விஷயத்தைக் கூறினால் தானே? எதை மன்-
41