20
20
மூன்றாம் காட்சி
இடம். சாஸ்திரியார் வீட்டின் கூடம்
காட்சி. ஆரம்ப மாகும்பொழுது பார்வதியும் சகுந்தலாவும் ஏதோ தங்களுக்குள் கேலிபண்ணிக் கொண்டி துந்ததுபோல் காணப்படுகின்றனர்.
பா. (உற்றுக் கேட்டு) அதோ! உன் தகப்பனார் வருகிறார்! -படுத்துக்கொள்.
ச. ஆமாம் அம்மா-ஆயினும் நான் அப்பாவுடன் பேசக் கூடாதா ? கூடாது
பா. -வாயை மூடு -அதோ (இருவரும் படுத் துக்கொண்டு போர்வைகளைப் போர்த்திக் கொள்கின் றனர்) தாமோதர சாஸ்திரி மெல்ல வருகிறார்.
(சாஸ்திரியார் அருகில் வரும்போது அவர்கள் மிகுந்த பாதை அனுபவிப்பதுபோல் பெருமூச்சு விடுகின்றனர்)
தா. ஹூம் -இது எப்பொழுது முடியப் போகிறது ?
பா. முடிவா ? சீக்கிரமே முடிந்துவிடும் பயப்படாதீர்கள். இன்றிரவு கழியும் வரையில் நாங்கள் பிழைத்திருக்க எங்களுக்குச் சக்தியில்லை என்று நினைக்கிறேன்.நமக்கு சக்தி யிருக்கிறதா சகுந்தலா ?
ச. அது ஸ்வாமிக்குத்தான் தெரியும் அம்மா.
தா. சகுந்தலா, துர்அதிர்ஷ்டம் வாய்ந்த பெண்ணே, நீயும் உன் தாயாருடன் கலந்து கொண்டாயா இதில்-உன் முழுமனதுடன் ?
ச. நான் என்ன செய்தேன் அப்பா ?
தா. எங்களுக்குள் சண்டை மூட்டிவிட்டு, நீங்கள் ஆளப் பார்க்காதீர்கள் தயவுசெய்து, இது அரசாட்சி யல்ல - மனையாட்சி ; தாயாரையும் மகளையும் எப்பொழுதும் பிரிக்க முடியாது-முடியுமா சகு ?