இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வெள்ளைத் தாமரை மீதினிலே
- விளங்கும் தாயே வணங்குகிறேன்.
கள்ளம் கபடம் இல்லாமல்
- கற்று நன்மை புரிந்திடவும்,
உள்ளும் புறமும் தூய்மையுடன்
- உலகில் வாழ்ந்தே உயர்ந்திடவும்
அள்ளி அள்ளிக் கலைகளையே
- அளிப்பாய் அறிவை வளர்ப்பாயே.