12
காலுக்குள் கால் வைக்கவும் கூசின்ை; அங்குச் சென் ருல் அணங்கு அணங்கும்.(வருத்தும்) என்று அச்சம் கொண்டான்; காசுடன் சென்று பாண்டி நாட்டி இன அண்மினன்; திரட்டிய செல்வத்தை நிதி சேமிக்கும் இடத்தில் உய்த்தனன்.
பொருள்தனப் போற்றிவாழ் என்னும் பொன்னுரைக்கிணங்கத் தான் ஈட்டிய பொருள் வளர்ச்சியில் வாளா இருக்கப் பொருத வணுய், அது வட்டி ஈனவே நிதி சேமிக்கும் இடத் தில் உய்த்தான் போலும் ! அவ்வாறு செய்தான். என்பதை,
ஒப்பில்மா கிதியம் எல்லாம் ஒருவழி பெருக உய்த்து என்னும் அடி விளக்குகின்றது. இதனுல், இக் காலத்து நிதி சேமிப்பு முறை, அக்காலத்தும் இருந்த தென்பது தெளிவாகிறது. செல்வத்திற்கு வேண் டிய செயலைப் புரிந்த வணிகன், தன் வாழ்நாளே இன்புடன் கழிக்க ஆண்டே தன் குலத்தைச் சார்ந்த நலன் தரும் நங்கை ஒருத்தியை நன்மணம் புரிந்த ண ன், மணம் புரிந்ததன் பயனுகப் பெண் மகவொன் றும் பெற்றெடுத்தான்; பெற்ற மகவுக்குப் புனிதவதி என்ற திருப்பெயரையே சூட்டினன்; பரமதத்தன் மகவும் மனேவியும் மனம் மகிழ்வு எய்தி நிற்க, மதுரை மாநகரில் இனிது வாழலுற்றன்.
புனிதவதியார் கணவன் வருகை நோக்கித் தம் கற்பு நெறி கடவாது வாழ்ந்து வந்தனர். கணவன் கன்னி நாடெய்திக் (பாண்டி நாடு) கன்னி ஒருத் தியை மணந்து களிப்புடன் வாழ்வதைச் சிறிதும்