உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

நா.வானமாமலை

திருப்தியளிக்காவட்டால், மனிதன் தனது உழைப்பால் அதனை மாற்ற முடிவு செய்கிறான் என்று லெனின் கூறுகிறார்.

ஆனால் புற உலகை மனிதன் தன் விருப்பப்படி மாற்ற முடியாது. புற உலகம் இயற்கை விதிகளுக்குட்பட்டு இயங்குகிறது. எனவே விதிகளை அறிந்து, புரட்சிகரமான செயலால் (நடைமுறை) உலகை மாற்ற வேண்டும். புற உலகம், உலக இயக்க விதிகளைப் பின்பற்றுகிறது. மனிதனது நடைமுறையில், செயல் இந்த இயக்க விதிகளுக்குத் தடையாக நிற்கக் கூடும்; விதிகளை அறியாத நடைமுறைச் செயல்கள் தோல்வியடையும். ஆனால் மனிதன் இயற்கையையும் உலகையும், மாற்றுவது அகவயமான ஆசைகளால் அல்ல. புற உலக இயக்க வாதிகள் மனித உள்ளத்திற்குக் கோரிக்கைகள் வைக்கின்றனர். மனிதனது நடைமுறை, புற உலகின் இயக்க விதிகளை அறிந்து செயல்படுத்தப்படும்பொழுது, மனிதன் வெற்றி பெறுகிறான். எனவே உலகை அறிந்து உள்ளத்தில் பிரதிபலிக்கச் செய்வதற்கு மூலாதாரங்கள், புறவய உலகமும், அதன்மீது செயல்படும் மனித நடைமுறையுமே (Practice and Praxis).

மனிதனது உணர்வில் தாக்கம் ஏற்படுத்தவும், ஓர் உலக நோக்கைப் படைக்கவும், கலை மனிதனது செயல்களுக்கு ஒரு திசைவழி காட்டுகிறது. இவ்வாறு வழிகாட்டுவதற்கு, முதலில் அது உலகை அழகியல் ரீதியில், அழகியல் விதிகளின்படி மாற்றுகிறது. உள்ளத்தில் உள்ள உலகம், புறவய உலகமாக மாறுவதற்குச் சிக்கலான இயக்கவியல் விதிகள் தொழில்படுகின்றன. இது குறித்து லெனின் கூறுவதாவது:

உள்ளத்திலுள்ள கருத்து, புறவய உண்மையாக மாறும் மாறுதல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தனிமனித வாழ்க்கையில் இது பெரிதும் உண்மையாயுள்ளது.

உம்மையான மனிதனது கதை (The story of a real man) என்ற நாவல் இத்தகைய மாறுதலுக்கு ஒரு சிறந்த உதாரணம், சோவியத் தேசபக்தப் போரில் ஒரு விமானப்படை அதிகாரிக்குக் கட்டை விரல் முறிந்துபோய் ஆப்பரேஷன் செய்து எடுத்துவிட்டார்கள். காலில் எந்தவிதக் குறைபாடு இருந்தாலும் விமானப் படையில் விமானம் ஓட்ட அனுமதிக்க மாட்டார்கள். அதன் பிறகு அவனது முழங்கால் வரை வெட்டியெடுத்துப் பொய்க்கால் அணிந்து கொள்ளும் நிர்பந்தம் ஏற்படுகிறது.

தேச பக்தியால் தூண்டப்பட்ட இவ்வீரன், பொய்க்காலோடு 'விமானம் ஓட்டவேண்டும், நாஸிகளை முறியடிக்க