- பாடசாலைக் கொண்டாட்டங்களில்,
ஆண்டு நிறைவு விழாக்களில், மாணவர் கள் நடிப்பதற்கேற்ற சீர்திருத்த நாடகம் வேண்டுமென்று எனது ஆசிரிய நண்பர் கள் பலர் கேட்டனர். நல்ல கருத்துள்ள கிராமிய நாடகம் எழுதுங்களென்று வானொலி நிலையத்தார் கேட்டனர். இரண் டையும் மனதில் கொண்டு எழுதினேன் இச்சிறு நாடகத்தை. -
- பொன்னப்பன் மகள் என்ற பெயரால்
17-1-1949-ல் திருச்சி வானொலி நிலையத் தில் இது நடிக்கப்பட்டது. ஒலி மூலம் கேட்கும் நாடகங்களுக்கும், காட்சி மூலம் காணும் நாடகங்களுக்கும் அமைப்பு முறை யில் சற்று வேறுபாடு உண்டு. ஒலியில் நிகழ்ந்த இந்நாடகத்தில், காட்சியில் நிகழ் வதற்கு ஏற்றவகையில் மாறுதல்கள் செய்துள்ளேன். முதற் காட்சிக்கும் இர ண்டாம் காட்சிக்கும் இடையே சுகாதாரப் பாட்டொன்று இருக்கலாம். மேலும் சில பாட்டுக்கள் சேர்த்துக்கொண்டால், மேடையில் நடிப்பதற்கு ஏற்றதாகும். எனது இச்சிறு தொண்டினைத் தமிழகம் ஏற்கும் என்ற நம்பிக்கை எனக் குண்டு
சலகண்டபுரம்,
15–11–49.
ப. கண்ணன்.