மின்னொளி
முதற்காட்சி.
(மணியக்காரர் பொன்னப்பர் வீடு. அவர் திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலைப்பாக்கு மென் றுகொண்டிருக் கிறார். எதிரே கணக்குப் புத்தகங்கள், கையிலே பகுத்தறிவு இதழும், முகத்திலே ஆவலுமாக மின் னொளி தோன்றுகிறாள் ) மின்னொளி :- அப்பா ஏதாவது பத்திரிக்கை வர
வழையுங்களேன்.
பொன் :- நமக்கு எதுக்கம்மா அதெல்லாம்! பட்ன வாசல்லே இருக்கிறவங்களுக்குத்தான் பத்தி ரிக்கை பார்க்கலேன்ன தின்ன சோறு ஜீரண மாகாது -
மின்னொளி :- அப்படியானால் எ ன் னை எதற்கப்பா
படிக்கவைத்தீர்கள்?
பொன் :- ஏதோ காலெழுத்து தெரிஞ்சிருந்தா தேவு லேன்னு பாத்தேன். இப்பத்தான் என்ன? நம்ம தாத்தா படிச்ச பக்தவிஜயம் இருக்குது, பாரதம், இருக்குது, கந்தபுராணம் இருக்குது எடுத்துப் படிம்மா..ரொம்ப நல்லது.
(பழைய பள்ளிக்கூடத்தின் புதிய ஆசிரிய இளைஞர் செல்லத்துரை வருகிறார்.)
செல்ல :- (பணிவோடு) ஐயா! வணக்கம்.
பொன் :- புது வாத்தியாரா! வாங்க உக்காருங்க,
என்ன விசேஷம்?