இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தேடித்தேடி என்ற கவிதையில் இரவு எதை எதையோ தேடிப் போவதாகச் சித்தரிக்கிறார். எதைத் தேடுகிறது என்று கேள்விக்குமேல் கேள்வி எழுப்புகிறார்:
- 'முதலாளிகளின்
- செவிச்சேற்றில் புதைந்து
- செத்துப்போன
- அழுகுரல்களை இது
- தேடுகின்றதோ?”
என்பதும் அக்கேள்விகளுள் ஒன்று. இது முதலாளித் துவத்தின் முகமூடியைக் கிழித்துக் காட்டவில்லையா?
- "இங்கே ஒரு புயல் பிறந்தால்
- இதன் வளங்களைச்
- சுட்டெரிக்கும் சுயநலக்காரரின்
- சுவடுகள் அழியும்
- பிறக்கவேண்டுமே.”
'பிறக்கவேண்டுமே’ என்பதில் உள்ள ஏக்கத்தொனி நம்மை எழ வைக்கிறது.
இவரால்தான் ஆரவாரமில்லாமல் புரட்சிக்குப் படைதிரட்ட முடியும்.
1974
18