18
246. ஓங்கி உயர்ந்து வளரும். அதற்கு
இலையுண்டு; கிளையில்லை; தென்னையல்ல;
நடுவே கணுக்கள் உண்டு; மூங்கிலும் அல்ல.
247. செக்கச் சிவந்திருப்பாள்;
செவ்வாழை போல் இருப்பாள்;
வாலும் முளைத்திருப்பாள்;
வந்திருப்பாள் சந்தையிலே.
248. கொதிக்கும் கிணற்றில் குதிப்பானம்.
கூச்சல் இல்லாமல் குளிப்பானாம்.
249. விடிந்தவுடனே வேலையில் இறங்குவான்.
வேலை இல்லையேல் மூலையில் கிடப்பான்.
250. ஆள் ஏறும் குதிரைக்கு அங்கமெல்லாம் கண்.
251. வெள்ளைக் கொல்லை; கறுப்பு விதை,
கை விதைக்கும்; வாய் கொறிக்கும்.
252. வீட்டிலே இருக்கிற அண்டாவுக்குக்
காதும் இல்லை; மூடியும் இல்லை.
253. பரட்டத்தலை மாமியாருக்குப்
பவளம்போல் மருமகள்.
254. பள்ளிக்கூடம் போகிற பாப்பாவுக்குக்
கையிலே ஒரு டை;
தலையிலே ஒரு டை.
255. மாவிலே பழுத்த பழம்,
மக்கள் விரும்பும் பழம்.
256. மஞ்சள் குருவி நெஞ்சைப் பிளந்து
மகாதேவனுக்குப் பூசை ஆகுது.
257. பகலில் துயிலுவான்;
இரவில் அலறுவான்.
258. மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும்.
259. விரிந்த ஏரியிலே வெள்ளோட்டம் மிதக்குது.