இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
15
காட்சிப் படலம்
கூர்வேலும் வாய்வாளும் பகையைத் தாக்கிக்
குவிக்கின்ற உடலங்கள் சிந்தும் செந்நீர்
பார்மேவி ஒன்றாகி ஓடும் ஆற்றின்
பரப்பதுவே அவன்குதித்து நீந்தும் வெள்ளம்;
ஏர்போலும் ஒருகருவி இடித்துத் தாக்கி
எழுகின்ற கூக்குரலே யாழின் பாட்டு;
சேர்காலை இருவாளும் எழுப்பும் ஓசை
செவிக்கினிய முழவோசை அவனுக் காகும். 9
ஆடரங்கம் போர்க்களமே அவனுக் காகும்
ஆர்த்துவரும் மறப்படைகள் பொம்மை யாகும்;
கூடரங்கில் வெட்டுண்ட பகைப்பு லத்தார்
குறையுடலம் எழுந்தெழுந்து குதிக்குங் காட்சி
நாடகங்கள் போலவற்கு மகிழ்ச்சி நல்கும்;
நாளெல்லாம் இஃதொன்றே தொழிலாக் கொண்டு
நாடனைத்தும் பணிவித்தான்; மூவ கத்தின்
நற்பெயரே மிகுவித்தான்; புகழ்கு வித்தான். 10
பார் - நிலம்