இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
33
காட்சிப் படலம்
சாதலுக்குத் துணைபோகும் சமரே கண்டோன்
காதலுக்குத் துணையாகும் உயிரைக் கண்டான்;
வீதலுக்குத் துணைபோகும் வேலே கண்டோன்
விழைவுக்குத் துணையாகும் விழியைக் கண்டான்;
வேதனைக்குத் துணைபோகும் களமே கண்டோன்
விண்வெளிக்குத் துணையாகும் நிலவைக் கண்டான்;
காதினிக்கப் போர்முரசின் ஒலியே கேட்டோன்
கடுந்தனிமைப் பெருமூச்சின் ஒலியைக் கேட்டான்.46
குறையிரவும் சிறிதேனும் நகர்த லின்றிக்
குடியிங்குக் கொண்டதென உணர்வு கொண்டான்;
நிறைமதியின் தண்கதிர்கள் பகைவர் வீசும்
நெடுவேல்க ளெனப்பாயத் தளர்ச்சி கொண்டான்;
விரைமலரின் இதழ்களெலாம் உடலு றுத்தி
வெப்புறுத்தித் துயர்ப்படுத்த வெறுப்புங் கொண்டான்;
அறைமதில்கள் சிறைமதில்போல் விளங்கக் கண்டான்;
அரும்பிவரும் காதலெனும் நோயில் வீழ்ந்தான்.47
சமர் - போர், வீதல் - இறப்பு,