இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வீரகாவியம் 42
வெவ்வலியன் இவ்வண்ணங் கனிந்தி ரங்கி
வினவுதலும், தான்விழைந்து வந்த எண்ணம் செவ்வையுடன் எளிதில் நிறை வேறும் என்று
சிந்தித்து விடைபகர்வாள், மூரல் ஊறுங் கொவ்வையிதழ் காணுங்கால், பெண்மை விஞ்சு
கோதையர்க்கும் வாயூறும்; விழிகள் கண் டால் நவ்வியினம் வணங்கிவரும்; தோள்கள் காணின்
நங்கையரும் மயங்கிடுவர் தமைம றந்தே! 65
நாடாளும் பலமன்னர் மணப்பான் வேண்டி
நான் நீஎன் றடுத்தடுத்தெம் நாட்டில் வந்து கூடாரம் அடித்ததுதான் மிச்சம் அந்தோ!
கூடாகி ஓடாகித் தம்மூர் மீண்டார்; கூடாது திருமணமே எனம றுத்துக்
கோலமயில் இளவரசி கூறி விட்டாள்; சூடாத மலர்பூத்த பருவ மங்கை
சூடுபெயர் வேல்விழியாம் ஐய! என்ருள். 66
நவ்வி - மான்