இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
45 காட்சிப் படலம்
இயல் 20
இளவரசி மனங்கவர்ந்த வீரன் இந்த வேழன்தான் என மொழிந்தாள்; அவன்ம கிழ்ந்தான்.
'மங்கையவள் மனக்கோயிற் றெய்வ மான
மாவீரன் யாவனவன்? மன்றல் கொள்ள இங்கவன்போற் பேருடை யான் ஒருவ னில்லை; று)
ஏங்குதற்குப் பிறந்தவரை ஏங்க விட்டாள்; பொங்கிவரும் எழிலுருவப் பூவை நெஞ்சுட்
புகுந்தவளுேர் நிகரில்லா வீரன் என்ருய்! எங்குளனுே அவ்விளைஞன்? போரில் என்றன்
எதிர்நிற்கும் நெஞ்சினனே? மொழிக' என்ருன். 72
ஒருநாளும் தோல்வியவன் கண்ட தில்லை;
உருத்தெழுந்தோர் நெடுநேரம் நின்ற தில்லை; வெருவாத மன்னரிலே அவன்பேர் கேட்டால்;
வெற்றிமகள் அம்மறவன் தோளே வேட்டாள்; மருவாரைப் புறங்கண்ட விர னேனும்
மாதரசி ஒருத்திக்குத் தோற்று விட்டான்; பெருவாளை வயல் தாவும் மூவ கத்துப்
பெருநாடே அவன் நாடாம் எனமொ ழிந்தாள். 73
வேட்டாள்-விரும்பினுள், மருவார் - பகைவர்.