இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
47 காட்சிப் படலம்
செப்புகின்றேன் உண்மைநிலை சினவேல் ஐய!
சியங்கள் பலகுழுமி எதிர்நின் ருலும்
உட்புகுந்தே விளையாடி அவற்றை யெல்லாம்
ஒவ்வொன்ரு எடுத்தெறியும் ஆற்றல் மிக்கான்;
இப்புவியின் இளவரசி காதல் நெஞ்சில்
இடங்கொ ண்ட பேறுடையான் யாவன் என்றே
துப்பறியத் துடிக்கின்ருய்! நின்னை யன்றித்
தொல்லுலகில் யாவருளார் வீரன் என்றே'. 77
எனமொழிந்த தோழியுரை கேட்டான் வீரன்
இறும்பூது மீக்கூர நிலைத்து நின்ருன்; முனமெழுந்த சினமடங்கி, ஆங்கு நின்ற
மொய்குழலி முகம்நோக்கி நகைத்துக் கையால் தினவெழுந்த தோள்தட்டி ஆர்த்த ஓசை
திசையெங்கும் மோதிஎதிர் ஒலிக்கக் கேட் டான்; முனமடைந்த வென்றிகளிற் காணு இன்பம்
மொய்ம்புடையான் நெஞ்சத் துட் புகுதக் கண்டான் 78
சினவேல்-கோபிக்காதே. சீயம்-சிங்கம். இறும்பூது-வியப்பு மீக் கூர-மேம்பட.