திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 123: வரிசை 123:
;உரை விளக்கம்: ஆ காத்தோம்பல் பேரறம் ஆகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ளவேண்டாத எண்மைத்து ஆகலின், 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல்லளவே ஆகலின், 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளிவந்தது இல்' என்றும் கூறினார்.
;உரை விளக்கம்: ஆ காத்தோம்பல் பேரறம் ஆகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ளவேண்டாத எண்மைத்து ஆகலின், 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல்லளவே ஆகலின், 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளிவந்தது இல்' என்றும் கூறினார்.
:இதனான் அறனும் முயன்று செய்வது அல்லது, இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.
:இதனான் அறனும் முயன்று செய்வது அல்லது, இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.







06:05, 7 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்

பரிமேலழகர் உரை

அதிகாரம் 107. இரவச்சம்

அதிகார முன்னுரை
அஃதாவது, மானந் தீர வரும் இரவிற்கு அஞ்சுதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.


குறள் 1061 (கரவாது )

கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு () கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும்

மிரவாமை கோடி யுறும். (01) இரவாமை கோடி உறும்.


தொடரமைப்பு: கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை, கோடி உறும்.


இதன் பொருள்
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்கண்ணும் இரவாமை= தனக்குள்ளது கரவாது இவர் வரப்பெற்றோம் என்று உண்மகிழ்ந்து கொடுக்கும் கண் போலச் சிறந்தார் மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்: கோடி உறும்= இரந்து செல்வம் எய்தலின் கோடிமடங்கு நன்று.
உரை விளக்கம்
நல்குரவு மறைக்கப்படாத நட்டார்மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின், உம்மை உயர்வுசிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது, அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிர் ஓம்பலே நல்லது என்பது கருத்து.


குறள் 1062(இரந்துமுயிர் )

இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து () இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக வுலகியற்றி யான். (02) கெடுக உலகு இயற்றியான்.


தொடரமைப்பு: உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக.


இதன் பொருள்
உலகு இயற்றியான், இரந்தும் உயி்ர் வாழ்தல் வேண்டின்= இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர்வாழ்தலை அன்றி இரந்தும் உயிர்வாழ்தலை வேண்டி விதித்தானாயின்; பரந்து கெடுக= அக்கொடியோன் தானும் அவரைப்போன்று எங்கும் அலமந்து கெடுவானாக.
உரை விளக்கம்
மக்கள் உயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தாற் கருவொடு கலந்த அன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும், ஒரு செய்தொழிலாகக் கற்பித்தான் ஆயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.


குறள் 1063 (இன்மையிடும் )

இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும் () இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்

வன்மையின் வன்பாட்ட தில். (03) வன்மையின் வன்பாட்டது இல்.


தொடரமைப்பு: இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின், வன்பாட்டது இல்.


இதன் பொருள்
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின்= வறுமையான் வரும் துன்பத்தை முயன்று நீக்கக் கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல;
வன்பாட்டது இல்= வலிமைப்பாடுடையது பிறிது இல்லை.
உரை விளக்கம்
நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவால் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று. வன்பாடு- முருட்டுத்தன்மை. அஃதாவது, ஓராது செய்து நிற்றல்.
இதனான் வறுமை தீர்தற்கு நெறி இரவன்று என்று கூறப்பட்டது.


குறள் 1064 (இடமெல்லாங் )

இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக் () இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம் இல்லாக்

காலு மிரவொல்லாச் சால்பு. (04) காலும் இரவு ஒல்லாச் சால்பு.


தொடரமைப்பு: இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு, இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே.


இதன் பொருள்
இடம் இல்லாக் காலும் இரவு ஒல்லாச் சால்பு= நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்த வழியும், பிறர்பால் சென்று இரத்தலை உடம்படாத அமைதி;
இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே= எல்லா உலகும் ஒருங்கு இயைந்தாலும், கொள்ளாத பெருமை உடைத்து.


உரை விளக்கம்
அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது.
இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.


குறள் 1065 (தெண்ணீரடு )

தெண்ணீர் அடுபுற்கை யாயினுந் தாடந்த () தெள் நீர் அடு புற்கை ஆயினும் தாள் தந்தது

துண்ணலி னூங்கினிய தில். (05) உண்ணலின் ஊங்கு இனியது இல்.


தொடரமைப்பு: தாள் தந்தது தெண்ணீர் அடு புற்கை ஆயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல்.


இதன் பொருள்
தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கை ஆயினும்= நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர்போலும் அடுபுற்கையே ஆயினும்;
உண்ணலும் ஊங்கு இனியது இல்= அதனை உண்டற்குமேல் இனியது இல்லை.


உரை விளக்கம்
தாள் தந்த கூழ் செறிவின்றித் தண்ணீர் போன்றதாயினும், இழிவாய இரவான் வந்தது அன்றித் தம் உடைமையாகலின், அமிழதத்தோடு ஒக்கும் என்பதாம்.
இதனால் நெறியினான் ஆயது சிறிதேனும் அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.


குறள் 1066(ஆவிற்கு )

ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற் () ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு

கிரவி னிளிவந்த தில். (06) இரவின் இளி வந்தது இல்.


தொடரமைப்பு: ஆவிற்கு நீர் என்று இரப்பினும், இரவின் நாவற்கு இளி வந்தது இல்.


இதன் பொருள்
ஆவிற்கு நீர் என்று இரப்பினும்= தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு அறன் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்;
இரவின் நாவிற்கு இளி வந்தது இல்= அவ்விரவு போல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை.
உரை விளக்கம்
ஆ காத்தோம்பல் பேரறம் ஆகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ளவேண்டாத எண்மைத்து ஆகலின், 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல்லளவே ஆகலின், 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளிவந்தது இல்' என்றும் கூறினார்.
இதனான் அறனும் முயன்று செய்வது அல்லது, இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.



குறள் 1067 (இரப்பன் )

இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற் () இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்

கரப்பா ரிரவன்மி னென்று. (07) கரப்பாரை இரவன்மின் என்று.


தொடரமைப்பு:


இதன் பொருள்
இரப்பாரை எல்லாம் இரப்பன்= இரப்பாரை எல்லாம் யான் இரவாநின்றேன்;
இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று= யாது சொல்லி எனின், நுமக்கு இரக்கவேண்டுமாயின் தமக்கு உள்ளது கரப்பாரை இரவாது ஒழிமின் என்று சொல்லி.
உரை விளக்கம்
இரண்டாவது விகாரத்தான் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டியவழியும், உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற, 'இரப்பன்' என்றார்.
இதனான் மானந்தீர வரும் இரவு விலக்கப்பட்டது.

குறள் 1068 (இரவென்னு )

இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும் () இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்

பார்தாக்கப் பக்கு விடும். (08) பார் தாக்கப் பக்கு விடும்.


தொடரமைப்பு: இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும் பார் தாக்கப் பக்கு விடும்.


இதன் பொருள்
உரை விளக்கம்



குறள் 1069(இரவுள்ள )

இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள () இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள

வுள்ளதூஉ மின்றிக் கெடும். (09) உள்ளதூஉம் இன்றிக் கெடும்.


தொடரமைப்பு: இரவு உள்ள உள்ளம் உருகும், கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.


இதன் பொருள்
உரை விளக்கம்


குறள் 1070 (கரப்பவர்க்கி )

கரப்பவர்க் கியங்கொளிக்குங் கொல்லோ விரப்பவர் () கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒ முயிர். (10) சொல் ஆடப் போஒம் உயிர்.


தொடரமைப்பு: சொல்லாட இரப்பவர் உயிர் போஒம், கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்.


இதன் பொருள்


உரை விளக்கம்

பார்க்க:

திருக்குறள் அதிகாரம் 108.கயமை
திருக்குறள் அதிகாரம் 106.இரவு
திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை
திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை
திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை
திருக்குறள் பொருட்பால் இயல் 1.அரசியல்
திருக்குறள் பொருட்பால் இயல் 2.அங்கவியல்
திருக்குறள் பொருட்பால் இயல் 3.ஒழிபியல்
[[]]  : [[]]  : [[]]  : [[]]