பட்டினப்பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28: | வரிசை 28: | ||
'''கேட்போர்''': நெஞ்சுக்குக் கூறியது |
'''கேட்போர்''': நெஞ்சுக்குக் கூறியது |
||
== == |
|||
=== === |
=== === |
08:35, 11 மே 2010 இல் நிலவும் திருத்தம்
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலையில் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்
நீர் நாப் பண்ணு நிலத்தின் மேலும்
பட்டினப்பாலை- மூலம்
சோழன் கரிகாற் பெருவளத்தானைக்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
பாடியது.
அகப்பாடல்
திணை: பாலைத்திணை
துறை:செலவழுங்கல் துறை
கூற்று: தலைவன் கூற்று
கேட்போர்: நெஞ்சுக்குக் கூறியது
- வசையில்புகழ் வயங்குவெண்மீன்
- றிசைதிரிந்து தெற்கேகினுந்
- தற்பாடிய தளியுணவிற்
- புட்டேம்பப் புயன்மாறி
- வான்பொய்ப்பினுந் தான்பொய்யா // 05 //
- மலைத்தலைய கடற்காவிரி
- புனல்பரந்து பொன்கொழிக்கும்
- விளைவறா வியன்கழனிக்
- கார்க்கரும்பின் கமழாலைத்
- தீத்தெறுவிற் கவின்வாட
- நீர்ச்செறுவி னீணெய்தற்
- பூச்சாம்பும் புலத்தாங்கட்
- காய்ச்செந்நெற் கதிரருந்தும்
- மோட்டெருமை முழுக்குழவி
- கூட்டுநிழற் றுயில்வதியுங் // 15 //
- கோட்டெங்கிற் குலைவாழைக்
- காய்க்கமுகிற் கமழ்மஞ்ச
- ளினமாவி னிணர்ப்பெண்ணை
- முதற்சேம்பின் முளையிஞ்சி
- யகனகர் வியன்முற்றத்துச் // 20 //
- சுடர்நுதன் மடநோக்கி
- னேரிழை மகளி ருணங்குணாக் கவருங்
- கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
- பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு
- முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் // 25 //
- விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்
- கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்
- குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
- வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
- நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி // 30 //
- பணைநிலைப் புரவியி னணைமுதற் பிணிக்குங்
- கழிசூழ்படப்பைக் கலியாணர்ப்
- பொழிற்புறவிற் பூந்தண்டலை
- மழைநீங்கிய மாவிசும்பின்
- மதிசேர்ந்த மகவெண்மீ // 35 //
- னுருகெழுதிற லுயர்கோட்டத்து
- முருகமர்பூ முரண்கிடக்கை
- வரியணிசுடர் வான்பொய்கை
- யிருகாமத் திணையேரிப்
- புலிப்பொறிப் போர்க்கதவிற் // 40 //
- றிருத்துஞ்சுந் திண்காப்பிற்
- புகழ்நிலைஇய மொழிவளர
- வறநிலைஇய வகனட்டிற்
- சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
- யாறுபோலப் பரந்தொழுகி
- யேறுபொரச் சேறாகித்
- தேரோடத் துகள்கெழுமி
- நீறாடிய களிறுபோல
- வேறுபட்ட வினையோவத்து
- வெண்கோயில் மாசூட்டுந் // 50 //
- தண்கேணித் தகைமுற்றத்துப்
- பகட்டெருத்தின் பலசாலைத்
- தவப்பள்ளித் தாழ்காவி
- னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு
- மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம் // 55 //
- மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
- பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
- தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு
- முதுமரத்த முரண்களரி
- வரிமண லகன்றிட்டை
- யிருங்கிளை யினனொக்கற்
- கருந்தொழிற் கலிமாக்கள்
- கடலிறவின் சூடுதின்றும்
- வயலாமைப் புழுக்குண்டும்
- வறளடும்பின் மலர்மலைந்தும் // 65 //
- புனலாம்பற் பூச்சூடியு
- நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
- நாண்மூன் விராய கோண்மீன் போல
- மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்
- கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப் // 70 //
- பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ
- திருஞ்செறுவி னிகன்மொய்ம்பினோர்
- கல்லெறியுங் கவண்வெரீஇப்
- புள்ளிரியும் புகர்ப்போந்தைப்
- பறழ்ப்பன்றிப் பல்கோழி // 75 //
- யுறைக்கிணற்றுப் புறச்சேரி
- மேழகத் தகரொடு சிவல்விளை யாடக்
- கிடுகுநிரைத் தெஃகூன்றி
- நடுகல்லி னரண்போல
- நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய // 80 //
- குறுங்கூரைக் குடிநாப்ப
- ணிலவடைந்த விருள்போல
- வலையுணங்கு மனன்முன்றில்
- வீழ்த்தாழைத் தாட்டாழ்ந்த
- வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர் //85 //
- சினைச்சுறவின் கோடுநட்டு
- மனைச்சேர்த்திய வல்லணங்கினான்
- மடற்றாழை மலர்மலைந்தும்
- பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
- புன்றலை யிரும்பரதவர் // 90 //
- பைந்தழைமா மகளிரொடு
- பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா
- துவவுமடிந் துண்டாடியும்
- புலவுமணற் பூங்கானன்
- மாமலை யணைந்த கொண்மூப் போலவுந் // 95 //
- தாய்முலை தழுவிய குழவி போலவுந்
- தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கு
- மலியோதத் தொலிகூடற்
- றீதுநீங்கக் கடலாடியு
- மாசுபோகப் புனல்படிந்து // 100 //
- மலவனாட்டியு முரவுத்திரை யுழக்கியும்
- பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டு
- மகலாக் காதலொடு பகல்விளை யாடிப்
- பெறற் கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
- பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் // 105 //
- துணைப்புணர்ந்த மடமங்கையர்
- பட்டுநீக்கித் துகிலுடுத்து
- மட்டுநீக்கி மதுமகிழ்ந்து
- மைந்தர் கண்ணி மகளிர் சூடவு
- மகளிர் கோதை மைந்தர் மலையவு // 110 //
- நெடுங்கான் மாடத் தொள்ளெரி நோக்கிக்
- கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணவும்
- பாட லோர்த்து நாடக நயந்தும்
- வெண்ணிலவின் பயன்றுய்த்துங்
- கண்ணடைஇய கடைக்கங்குலான் //115 //
- மாஅகாவிரி மணங்கூட்டுந்
- தூஉவெக்கர்த் துயின்மடிந்து
- வாலிணர் மடற்றாழை
- வேலாழி வியன்றெருவி
- னல்லிறைவன் பொருள்காக்குந் // 120 //
- தொல்லிசைத் தொழின்மாக்கள்
- காய்சினத்த கதிர்ச்செல்வன்
- றேர்பூண்ட மாஅபோல
- வைகறொறு மசைவின்றி
- யுல்குசெயக் குறைபடாது // 125 //
- வான்முகந்த நீர் மலைப்பொழியவு
- மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு
- நீரினின்று நிலத்தேற்றவு
- நிலத்தினின்று நீர்ப்பரப்பவு // 130 //
- மளந்தறியாப் பலபண்டம்
- வரம்பறியாமை வந்தீண்டி
- யருங்?கடிப் பெருங்காப்பின்
- வலியுடை வல்லணங்கினோன்
- புலிபொறித்துப் புறம்போக்கி //135 //
- மதிநிறைந்த மலிபண்டம்
- பொதிமூடைப் போரேறி
- மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
- வரையாடு வருடைத் தோற்றம் போலக்
- கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை // 140 //
- யேழகத் தகரோ டுகளு முன்றிற்
- குறுந்தொடை நெடும்படிக்காற்
- கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற்
- புழைவாயிற் போகிடைகழி
- மழைதோயு முயர்மாடத்துச் //145 //
- சேவடிச் செறிகுறங்கிற்
- பாசிழைப் பகட்டல்குற்
- றூசுடைத் துகிர்மேனி
- மயிலியன் மானோக்கிற்
- கிளிமழலை மென்சாயலோர் // 150 //
- வளிநுழையும் வாய்பொருந்தி
- யோங்குவரை மருங்கி னூண்டா துறைக்குங்
- காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன
- செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்
- வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் // 155 //
- குழலகவ யாழ்முரல
- முழவதிர முரசியம்ப
- விழவறா வியலாவணத்து
- மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய
- மலரணி வாயிற் பலர்தொழு கொடியும் //160 //
- வருபுன றந்த வெண்மணற் கான்யாற்
- றுருகெழு கரும்பி னொண்பூப் போலக்
- கூழுடைக் கொழுமஞ்சிகைத்
- தாழுடைத் தண்பணியத்து
- வாலரிசிப் பலிசிதறி // 165 //
- பாகுகுத்த பசுமெழுக்கிற்
- காழூன்றிய கவிகிடுகின்
- மேலூன்றிய துகிற்கொடியும்
- பல்கேள்வித் துறைபோகிய
- தொல்லாணை நல்லாசிரிய // 170 //
- ருறழ்குறித் தெடுத்த வுருகெழு கொடியும்
- வெளிலிளக்குங் களிறுபோலத்
- தீம்புகார்த் திரைமுன்றுறைத்
- தூங்குநாவாய் துவன்றிருக்கை
- மிசைக்கூம்பி னசைக்கொடியு// 175 //
- மீன்றடிந்து விடக்கறுத்
- தூன்பொரிக்கு மொலிமுன்றின்
- மணற்குவைஇ மலர்சிதறிப்
- பலர்புகுமனைப் பலிப்புதவி
- னறவுநொடைக் கொடியோடு // 180 //
- பிறபிறவு நனிவிரைஇப்
- பல்வேறு ருருவிற் பதாகை நீழற்
- செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற்
- செல்லா நல்லிசை யமரர் காப்பி
- னீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங் // 185 //
- காலின் வந்த கருங்கறி மூடையும்
- வடமலைப் பிறந்த மணியும் பொன்னுங்
- குடமலைப் பிறந்த வாரமு மகிலுந்
- தென்கடன் முத்துங் குணகடற் றுகிருங்
- கங்கை வாரியுங் காவிரிப் பயனு // 190 //
- மீழத் துணவுங் காழகத் தாக்கமு
- மரியவும் பெரியவு நெரிய வீண்டி
- வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி
- னீர்நாப் பண்ணு நிலத்தின் மேலு
- மேமாப்ப வினிதுதுஞ்சிக் // 195 //
- கிளைகலித்துப் பகைபேணாது
- வலைஞர்முன்றின் மீன்பிறழவும்
- விலைஞர் குரம்பை மாவீண்டவுங்
- கொலைகடிந்துங் களவுநீக்கியு
- மமரர்ப் பேணியு மாவுதி யருத்தியு // 200 //
- நல்லானொடு பகடோம்பியு
- நான்மறையோர் புகழ்பரப்பியும்
- பண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்தும்
- புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
- கொடுமேழி நசையுழவர் // 205 //
- நெடுநுகத்துப் பகல்போல
- நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
- வடுவஞ்சி வாய்மொழிந்து
- தமவும் பிறவு மொப்ப நாடிக்
- கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது // 210 //
- பல்பண்டம் பகர்ந்துவீசுந்
- தொல்கொண்டித் துவன்றிருக்கைப்
- பல்லாயமொடு பதிபழகி
- வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற்
- சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு // 215 //
- மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
- புலம்பெயர் மாக்கள் கலந்துனி துறையு
- வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய
- முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
- வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் // 220 //
- கொடுவரி்க் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
- பிறர், பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
- யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
- பெருங்கை யானை பிடிபுக் காங்கு
- நுண்ணிதி னுணர நாடி நண்ணார் // 225 //
- செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்
- துருகெழு தாய மூழி னெய்திப்
- பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
- கடியரண் டொலைத்த கதவுகொன் மருப்பின்
- முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா // 230 //
- ளுகிருடை யடிய வோங்கெழில் யானை
- வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
- பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
- தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு
- வேறுபல் பூளையொ டுழிஞை சூடிப் // 235 //
- பேய்க்க ணன்ன பிளிறுகடி முரச
- மாக்க ணகலறை யதிர்வன முழங்க
- முனைகெடச் சென்று முன்சம முருக்கித்
- தலைதவச் சென்று தண்பணை யெடுப்பி
- வெண்பூக் கரும்பொடு செந்நெ னீடி // 240 //
- மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக்
- கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக்
- கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச்
- செறுவும் வாவிய மயங்கி நீரற்
- றறுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவுங் // 245 //
- கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி
- யந்தி மாட்டிய நந்தா விளக்கின்
- மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
- வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியிற்
- பருநிலை நெடுந்தூ ணொல்கத் தீண்டிப் // 250 //
- பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவு
- மருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்
- முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
- திரிபுரி நரம்பின் றீந்தொடை யோர்க்கும்
- பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச் // 255 //
- சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
- யழல்வா யோரி யஞ்சுவரக் கதிர்ப்பவு
- மழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவுங்
- கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப்
- பிணந்தின் யாக்கைப் பேய்மக டுவன்றவுங் // 260 //
- கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி
- விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டி
- லொண்சுவர் நல்லி லுயர்திணை யிருந்து
- பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்
- தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக் //265 //
- கொடுவிலெயினர் கொள்ளை யுண்ட
- வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து
- வளைவாய்க் கூகை நன்பகற் குழறவு
- மருங்கடி வரைப்பி னூர்கவி னழியப்
- பெரும்பாழ் செய்து மமையான் மருங்கற // 270 //
- மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே
- வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்
- தான்முன்னிய துறைபோகலிற்
- பல்லொளியர் பணிபொடுங்கத்
- தொல்லருவாளர் தொழில்கேட்ப // 275 //
- வடவர் வாடக் குடவர் கூம்பத்
- தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர்
- மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண்
- மாத்தானை மறமொய்ம்பிற்
- செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப் // 280 //
- புன்பொதுவர் வழிபொன்ற
- விருங்கோவேண் மருங்குசாயக்
- காடுகொன்று நாடாக்கிக்
- குளந்தொட்டு வளம்பெருக்கிப்
- பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் // 285 //
- கோயிலொடு குடிநிறீஇ
- வாயிலொடு புழையமைத்து
- ஞாயிறொறும் புதைநிறீஇப்
- பொருவேமெனப் பெயர்கொடுத்
- தொருவேமெனப் புறக்கொடாது // 290 //
- திருநிலைஇய பெருமன்னெயின்
- மின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி
- விசிபிணி முழவின் வேந்தர் சூடிய
- பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற்
- பொற்றொடிப் புதல்வ ரோடி யாடவு // 295 //
- முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவுஞ்
- செஞ்சாந்து சிதைந்த மாப்பி னொண்பூ
- ணரிமா வன்ன வணங்குடைத் துப்பிற்
- றிருமா வளவன் றெவ்வர்க் கோக்கிய
- வேலினும் வெய்ய கானமவன் // 300 //
- கோலினுந் தண்ணிய தடமென் றோளே.
சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலை முற்றும்
இப்பாடலின் மொத்த அடிகள்: 301 (முந்நூற்றொன்று)
பாவகை: வஞ்சிப்பா (வஞ்சிநெடும்பாட்டு என்றும் இதனை அழைப்பர்: தமிழில் உள்ள வஞ்சிப்பா வகையில் மிகப் பெரியது இதுவே)
வெண்பா
- முச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்
- இச்சக் கரமே யளந்ததாற்- செய்ச்செய்
- அரிகான்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன்
- கரிகாலன் கானெருப் புற்று.
- இந்தவெண்பா பொருநராற்றுப்படையின் இறுதியிலுள்ள மூ்ன்றாவது வெண்பாவாகவும் உள்ளது.
முக்கியச் செய்திகள்
- வினைமுடிபு: