இரண்டாம் அங்கம் முதல் காட்சி இடம்- அரண்மனையி லோர் அறை, வனஜா வருகிருள். நான் கினைத்த வண்ணமே முடிந்தது ! அவராவது என் மீது காதல் கொள்வதாவது ! அவருடைய மனம் திடீ ரென்று மாறியவுடன், ஏதோ இதில் சந்தேகம் தட்டிய தெனக்கு. பிதாதான் மதிமோசம் போனர்; இளவர சர் கிரிஜாவின் மீது கொண்டிருக்கும் காதலின் திறத்தை யறிந்த நான், என் மீதவர்காதல் கொள்வார் என்னும் எண்ணத்தை எப்படிக் கொண்டேன் என்று எனக்கே ஆச்சரியமா யிருக்கிறது. என்ன புத்திஹlனம் நான் அவர்மீது கொண்டகாதலே, இவ்வாறு என் மதியை மயங்கச்செய்தது உண்மையை ஒளிப்பானேன் எப் படியாவது நம்மை மணம் புரிந்தாற் போதுமென்று எண்ணியிருந்த நான், இளவரசர் புத்தி விகற்பத்தால், அன்றைத்தினம் அவ்வாறு என்னிடம் கூறவே, யோசி யாது நம்பிவிட்டேன். இனி என்ன செய்வது ஐயோ! அவர் முதலிலிருந்தபடியே இருந்தபோதிலும் என் மனத்தை ஒருவாறு திருப்பிக்கொண்டிருப்பேன். எனக் குக்கிட்டும் இப்பேரின்பம், என்னும் ஆசை யுண்டாகவே, எனக்கவர் மீதிருந்த காதல் பதின்மடங்கு அதிகமாய் விட்டதே இனி இதனை அடக்க வென்னுலாகவில்லை; ஐயோ! இதற்கு நான் என் செய்வது? இத்துயரை நான் எப்படி சகிப்பேன் ஆயினும் வேறு வழியில்லை. கடைசி முறை கேட்டுப்பார்ப்போம். இப்பொழுதும், தான் கிரிஜா வின்மீதே காதல் கொண்டிருப்பதாக அவர் கூறுவாராளுல் நான் அவரை கிந்திப்பதிற் பயனென்ன ? என்மீது கிஞ் சித்தேனும் காதலில்லாதிருக்கும்பொழுது, அவர் என்னே - + - - * - இடு * -- Tì மணந்துதான் நான் என்ன சுகமனுபவிக்கப்போகிறேன் :