பக்கம்:Mixture.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட டப்புவின் உல்கப் பிரயாணங்கள் 21 அங்கு அருகாமையில் இமயமலையில் முளைத்திருந்த ஒரு செடியின் வித்தை எடுத்து, அதை ஏதோ ஒரு மூலிகையின் ரசத்தில் தோய்த்து, என் கையில் கொடுத்து, ஒரிடத்தைக் காண்பித்து, 'இங்கு இதை கட்டு தினம் இந்தமான சசாசலிருக்கும் தண்ணீரைக் கொண்டு வந்த ஒரு குடம் வார்த்துக் கெண்டுவா, முதல் நாள் ஒரு அடி உயரம் செடி வளரும், இரண்டாவது நாள் இரண்டு அடி வளரும் முன்ரும் நாள் நான்கு அடி வளரும், இப்படியே நாளுக்கு நாள் இரட்டிப்பாக வளரும், சீக்கிரத்தில் அச்செடி சந்திாமண்டலத் தை எட்டும், பிறகு நீ அச்செடியின் மீதேறி சந்திரமண்டலம் போய்ச் சேரலாம்” என்று கூறினர் நான் அவ்வாறே அவ்வித்தை கட்டு, தண்ணீர் வார்த்துக் கொண்டு வர, சில தினங்களுக்கெல்லாம் அச் செடி சந்திர மண்டலத்தைக் கிட்டியதைக்கண்டு சந்தோஷித்து, அதன் மீதேறி சந்திர மண்டலத்தை யடைந்தேன். அங்கு போன பிறகு அமிர்தம் இருக்குமிடத்தை அறியாது இங்கும் அங்கும் நான் சுற்றிக் கொண்டிருக்க, அங்கிருத்த ஒரு மஹான் என் மீது பச்சாத்தாபங் கொண்டு அது இருக்கு மிடத்தை எனக்குக் காண்பித்து அதில் கொஞ்சம் சாப்பிடும்படி செய்தார். ஆனல் அப்படிச் செய்யு முன் சந்திரமண்டலத்தி அள்ள இரகசியங்கள் ஒன்றையும் நான் பூமண்டலத்தில் ஒருவருக் கும் சொல்லக் கூடாது என்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். ஆகவே அங்கு நான் கண்ட அநேக அற்புதங்களைப் பற்றி உங்களுக்கு நான் ஒன்றும் சொல்வத்ற்கில்லை. அந்த அமிர்தத் தை நான் சாப்பிட்ட பொழுது, எனக்கு வயது முப்பத்திரண்டு; 9.5 முதல் இதுவரைக்கும், அதன்பலகை, நான் முப்பத்திரண்டு வயதிலேயே யிருக்கிறேன். நான் சந்திர மண்டலத்திலிருந்து எப்படி பூமிக்கு திரும்பி வந்தேன் என்று நீங்கள் அறிய விரும்புவீர்கள் என்று நினைக்கி றேன். உங்களில் பெரும் பாலர், நான் ஏறிப் போன செடியின் வழியாகத் திரும்பி வந்திருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள் ; அப்படி செய்யவில்லை நான். ஏனென்ருல், நான் சந்திர மண்டலத் துக்கு போனதும், அதுவளர்ந்த வனத்தில் அச்செடிக்கு மானச சாசின் தண்ணீரை வார்க்க மறந்து போய் விட்டபடியால், அச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/28&oldid=727320" இலிருந்து மீள்விக்கப்பட்டது