இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
123
- ஆண் : சீருலாவும் இன்ப நாதம்
- ஜீவ சங்கீதம்!
- பெண் : செவி நாடும் தேன் சுவை யன்றோ
- திருவே உமது கானம் (சீரு)
- ஆண் : ஆவியே இயல் இசை போலே நாமே
- அன்பினால் கலந்தே மகிழ்வோம்.
- பெண்: ஏழை எனது தாழ்வை அகற்றி
- வாழ்வு தந்தீர் எல்லாம் என் பாக்கியம் (சீரு)
- பெண்: நாதத்தால் மனம் வசமாகும் போது
- பேதம் பாராது!
- ஆண் : காதலலைகள் மோதும் மனதில்
- தாழ்வு உயர் வேது?
- பெண் : ஆசை மொழியே பேசி எனையே
- ஆளும் அரசே எல்லாம் என் பாக்கியம்!
- ஆண் } சீருலாவும் இன்ப நாதம் ஜீவ சங்கீதம்!
- பெண்} ஹம்மிங்
வடிவுக்கு வளைகாப்பு-1962
- இசை : K. V மகாதேவன்
- பாடியவர்கள் : T. M. செளந்தரராஜன் & P சுசிலா