பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147


கனகா : கண்களால் காதல் காவியம்-செய்து
காட்டிடும் உயிர் ஓவியம்-தங்கள்
அன்பெனும் சாம்ராஜ்ஜியம்-சொந்த
மானதே எந்தன் பாக்கியம்!


சாரங் : கண்களால் காதல் காவியம்-செய்து
காட்டிடும் உயிர் ஓவியம்-உந்தன்
அன்பெனும் சாம்ராஜ்ஜியம்-சொந்த
மானதே எந்தன் பாக்கியம்!


கனகா : தங்களால் இந்த இன்பமே-என்றும்
சாஸ்வத மாகிட வேண்டுமே!


சாரங் : தங்கமே அதில் ஐயமேன்? இன்ப
சாகரம் மென்மேலும் பொங்குமே!


கனகா : திங்களைக் கண்ட அல்லி போல்-திரு
வாய் மொழியால் உள்ளம் மலருதே!


சாரங் : செந்தமிழ் கலைச் செல்வியே-மனம்
தேனுண்ணும் வண்டாய் மகிழுதே!  (கண்களால்)


கனகா : மண்ணிலே உள்ள யாவுமே-எழில்
மன்னவர் உம்மைப் போல் காணுதே