பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162


வீசிய புய லென்னும் விதி வலியால் துவண்டு விட்ட
வாச மலர்க் கொடிக்கு வாழ்வு தர ஒடி வந்தாய்!
ஆசை யென்ற கை கொடுத்தாய்! பாசமென்ற பந்தல் போட
யோசனையும் செய்வது ஏன்? உணர்ந்து பாராய் மனமே?

(பல்லவி)

அசைந்து குலுங்கும் சதங்கை ஒலியும்
ஆயிரம் கதைகள் சொல்லிடுமே!
அழகும் இளமையும் காண்பவர் இதயம்
அலைகடல் போலே துள்ளிடுமே!  (அசைந்து)

(சரணம்)

வசந்த முல்லைத் தேனெடுத்து
வண்ணச் சந்தனப் பொடி சேர்த்து
கலந்தே செய்த சிலை வடிவம்-என
கருதிடச் செய்யும் பெண்ணுருவம்!(அசைந்து)
கண்ணில் மின்னல் விளையாட!
கையில் வளையல் இசை பாட!
அன்னம் போல நடை போடும்-ஒரு
கன்னிப் பெண்ணின் கால்களிலே(அசைந்து)
எல்லாம் உனக்காக-1961
இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : P. சுசிலா