இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
172
- நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே-உன்னை
- நீங்கிடாத துன்பம் பெருகுதே!
- அணைந்த தீபமாய் ஆகிப் போனதே-வாழ்க்கை
- உடைந்து போன சிலையானதே!
- நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே!
- அமைதி யின்றியே அலைய நேர்ந்ததே!(நினை)
- எங்கிருந்து நீவாடுகின்றாயோ?
- துன்ப கீதமே பாடுகின்றாயோ?
- இந்த நிலை என்று மாறுமோ?-உனைக்காணும்
- இன்ப நாளுமே வந்து சேருமோ?(நினை)
சதாரம்-1956
- இசை : G. ராமநாதன்
- பாடியவர் : T. M. செளந்தரராஜன்