இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
199
- கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!
- உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
- உண்மையில்லாதது!
- அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்!
- அடையாளம் காட்டும்! பொய்யே சொல்லாதது!
- காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்
- கண்முன்னே தோன்றுவது சாத்தியமே!
- காத்திருந்து கள்வருக்குக் கை விலங்கு பூட்டிவிடும்
- கண்ணுக்குத் தோணாத சத்தியமே!
- போடும் பொய்த் திரையைக் கிழித்து விடும் காலம்!
- புரியும் அப்போது மெய்யான கோலம்!(கண்)
- ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
- உருத்திராட்சப் பூனைகளாய் வாழுறீங்க:
- சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
- ஏமாற்றிக் கொண்டாட்டம் போடுறீங்க!
- பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை!
- உண்மை எப்போதும் தூங்குவது மில்லை!(கண்)
- பொன் பொருளைக் கண்டவுடன்
- வந்த வழி மறந்து விட்டுக்
- கண்மூடி போகிறவர் போகட்டுமே!
- என் மனதை நானறிவேன்!