இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
263
- என்னைத் தெரியலையா?
- இன்னும் புரியலையா?
- குழந்தை போலே எம்மனசு-என்
- வழியோ என்றும் ஒரு தினுசு! (என்னைத்)
- அழகை ரசிப்பதில் கவிஞன் நான்!
- அன்பு காட்டினால் அடிமை நான்!
- பழகும் தன்மையில் பண்புள்ள தமிழன்!
- பரந்த நோக்கம் உள்ளவன் நான்!(என்னைத்)
- காதல் பாதையில் கம்பன் மகன்!
- கன்னி தான் இன்னும் கிடைக்கலே!
- கவலை ஏதுமே இல்லாத மனிதன்
- சிரிக்க வைப்பதில் வல்லவன் நான்! (என்னைத்)
- அனுபவப் படிப்பில் முதிர்ந்தவன் நான்!
- ஆசைத் துடிப்பிலே வாலிபன்!
- என்னையறிந்தோர் எல்லோர்க்கும் நண்பன்!
- இரக்க சிந்தை உள்ளவன் நான்! (என்னைத்)
யாருக்கு சொந்தம்-1963
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்: சந்திரபாபு